மார்கழி 29 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 29 : சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

Jan 13, 2025,10:19 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 29 :


சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.




பொருள் :


மார்கழி மாதத்தின் இந்த குளிர்ந்த காலை பொழுதில் தினமும் எழுந்து, நீராடி உன்னை போற்றி பாடி, உன்னுடைய அருளை பெறுவதற்காக சிறுமிகளாகிய நாங்கள் வந்து உன்னுடைய பொன் போன்ற மின்னும் திருவடிகளை வணங்கி நிற்கிறோம். நாங்கள் இப்படி வந்து நிற்பதற்கான காரணத்தை நீ கேட்க வேண்டும். பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து வாழும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, நாங்கள் ஒரு மாதமாக கடைபிடித்த விரதத்தில் குற்றம் குறை ஏதாவது இருந்தால் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இருக்கும் குறைகளை பெரிதாக நினைத்து எங்களை கண்டு கொள்ளாமல், உன்னுடைய அருளை வழங்காமல் இருந்து விடாதே. நீ கொடுக்கும் சிறிய பரிசுப் பொருட்களுக்காக உன்னை போற்றி பாடி நிற்கவில்லை. எதிரிகளை வெற்றி கொள்ளும் பெருமை மிகுந்த கோவிந்தனே! இந்த பிறவியில் மட்டுமல்ல இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீ எங்களின் குலத்தில் தோன்ற வேண்டும். உன்னுடைய உறவினர்களாக எங்களை ஏற்க வேண்டும்.


உனக்கு மட்டுமே தொண்டு செய்து வாழ்வது எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். உன் மீதான பக்தியை தவிர மற்ற அனைத்து விதமான உலக இன்பங்களின் மீது ஏற்படும் பற்றுக்களை எங்களில் உள்ளங்களில் இருந்து அகற்றி விடு. உன்னுடைய அருளை மட்டுமே பெரிதாக எண்ணும் மனத்தை எங்களுக்கு அளித்திட வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்