ஒடிசாவில்.. சாப்பிடக் கூட வழியில்லை.. வறுமையின் கொடுமை.. 7 வயது பேரனை 200க்கு விற்ற மூதாட்டி!

Mar 21, 2025,06:11 PM IST

பூரி: ஒடிசாவில் வீடு இல்லாமலும், சாப்பிடக் கூட வழியில்லாத கொடுமையான வறுமையில் வாடும் மூதாட்டி ஒருவர் தனது ஏழு வயது பேரனை 200 ரூபாய்க்கு விற்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஒடிசா மாநிலம் பாட்டியா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி சோரன் ராய்ப்பால் என்பவர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார். இவருடன் அவரது 7 வயது பேரன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு வீடு இல்லை, நிலம் இல்லை, எந்த ஒரு அரசாங்க நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதனால் மூதாட்டி தனது பேரனுக்கு உணவு கொடுக்க கூட கையில் பணம் இல்லாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.


மூதாட்டியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகனும் காணாமல் போனார். மருமகள் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மூதாட்டி ஒற்றை ஆளாக இருந்து தனது பேரனை யாசகம் பெற்று பேரனை வளர்க்க மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார். தனது பேரனை வளர்க்க தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று உதவி கோரினார். ஆனால் சகோதரியின் உடல் நிலையும் மோசமான காரணத்தால் தனது பேரனை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. 




இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது 7  பேரனை 200 ரூபாய்க்கு விற்றுள்ளார் பாட்டி. இதனை அறிந்த உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் ரஸ்கோவிந்த்பூர் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலக அதிகாரிகள் மூதாட்டியை சந்தித்து விசாரித்தார். 


அப்போது அந்த மூதாட்டி குழந்தையை நிதி ஆதாயத்திற்காக விற்கவில்லை. குழந்தையை இனிமேல் பராமரிக்க முடியாததால், தனது பேரனுக்காவது வீடும் சிறந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு தம்பதியினரிடம் ரூபாய் 200 க்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். அதே சமயத்தில் மூதாட்டிக்கு அரசு உதவிகள் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்