எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும்.. நேருக்கு நேர் உட்காரவைத்து.. என்ன பேசினார் அமித்ஷா?

Apr 27, 2023,09:20 AM IST
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சரும், முக்கியமான பாஜக தலைவருமான அமித்ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார் என்பதால் அங்கு என்ன பேசப்பட்டது என்பது எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்டுள்ளது.

சமீப காலமாக அதிமுக - பாஜக கட்சிகளுக்கிடையே உரசல் அதிகமாக உள்ளது. தேசியத் தலைவர்களுக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் லோக்கல் தலைவர்களுக்கு இடையேதான் உரசல் முட்டல் மோதல் அதிகமாக உள்ளது.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஒத்தே போகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகி விடுவேன்.. நானும் ஜெயலலிதா எம்ஜிஆர் போலத்தான்.. என்றெல்லாம் தொடர்ந்து அதிமுகை சீண்டும் வகையில் அண்ணாமலை பேச.. அதற்கு அதிமுக பதிலடி கொடுக்க.. உச்சமாக,  அரசியல் அடிப்படை கூட தெரியதாவர் பற்றியெல்லாம் என் கிட்ட பேசாதீங்க.. அவர் ஒரு விளம்பரப் பிரியர் என்று எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை விமர்சிக்க என தகராறு பெரிதாகி வந்தது.



இந்த நிலையில்தான் நேற்று எடப்பாடி பழனிச்சாமி டெல்லி கிளம்பிச் சென்றார். அவர் அதிமுக பொதுச் செயலாளரான பிறகு முதல் முறையாக டெல்லிக்குப் போனதால் அதிமுகவினர் தடபுடலாக வழியனுப்பி வைத்தனர். டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

அதை விட முக்கியமாக அண்ணாமலையும் அங்கு இருந்தார். ஜே.பி.நட்டாவின் வலதுபுறத்தில் அண்ணாமலையும், அமித்ஷாவின் இடதுபுறத்தில் எடப்பாடியும் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்தபோது கூட்டணி குறித்தோ, அரசியல் நிலவரங்கள் குறித்தோ பேசியது போல இல்லை.. மாறாக உங்களுக்குள் என்ன சண்டை.. இந்த சண்டையெல்லாம் நமக்கு எந்த லாபத்தையும் தராது.. முதலில் இருவரும் சமரசமாகுங்கள்.. இணைந்து செயல்படுங்கள்.. அப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களது கட்சியும் வலுப்படும் என்று அமித் ஷா பஞ்சாயத்து பேசி சமரசம் செய்தது போலவே தெரிந்தது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறிய அண்ணாமலைக்கு மறைமுகமாக, இந்தக் கூட்டணி நீடிக்கும் என்பதை அமித் ஷா உணர்த்தியது போலவும் இந்த சந்திப்பு அமைந்தது. அதேபோல, அண்ணாமலையும் எங்களுக்கு முக்கியம், அவர் உங்களுக்கு சமமானவர் என்று எடப்பாடி தரப்புக்கு உணர்த்தியது போலவும் இந்த சந்திப்பைப் பார்க்க முடிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து செயல்படுவார்களா.. சண்டை தீருமா.. என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டிவீட் போட்டுள்ளார்.. அதற்கு ஒரு நெட்டிசன்.. பார்க்க "பேரன்ட் டீச்சர்" மீட்டிங் போலவே இருக்கு என்று கமெண்ட் அடித்துள்ளார்.!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்