சென்னை: சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து எரிந்து வயர்கள் எரிந்து வந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஹாலினா (51). இவரது மகள் நஸ்ரியா (16). நேற்று இரவு வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்து விட்டு தாயும் மகளும் படுத்துத் தூங்கப் போயுள்ளனர்.
ஏசி போட்டு தூங்கியுள்ளனர். இந்த நிலையில் ஏசி மெஷினில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஏசி மெஷினில் ஏற்பட்ட தீயால் வயர்கள் தீப்பிடித்து எரிந்து அந்த அறை முழுக்க தீ பரவியது. புகையும் பரவியது. இதில் ஹாலினாவும், நஸ்ரியாவும் சிக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தாய் மகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல ஏசி மெஷினில் தீப்பிடிக்கும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஏசி மெஷின்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாக ஏசி மெக்கானிக்குகள் எச்சரிக்கிறார்கள். முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}