Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்

Oct 24, 2024,03:10 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில்உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வருகிற அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




அதன்படி, கூட்டுறவு துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாய விலை கடைகள் 10,164 பகுதி நேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 34,774 நியாய விலை கடைகளில் குடிமைப் பொருட்களை பெற்று, தீபாவளி பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாய விலை கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 27.10.2024 அன்று முழுவதுமாக வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

விஜய் கட்சியின்.. விக்கிரவாண்டி மாநாட்டு தேதிக்கு பின்னால இவ்வளவு மேட்டர் இருக்கா?

news

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. ஏற்பாடுகள் பிரமாண்டம்.. பாதுகாப்புக்கு மட்டும் 5,500 போலீஸ்!

news

சென்னை பீச்சில் அடாவடி செய்த.. சந்திரமோகன் தனலட்சுமி.. ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

news

Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்

news

தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு

news

ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!

news

தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

news

சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?

news

பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்