இனி ஓன் யூஸ் காரையும்.. டாக்சி போல பயன்படுத்தலாம்.. போக்குவரத்து துறை  அதிரடி

Nov 18, 2023,05:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில்  இனி எந்த வகையான கார்களையும் வாடகைக் கார்களாக பயன்படுத்த முடியும். அதற்கான அனுமதியையும், உரிய கட்டணத்தையும் போக்குவரத்துத் துறைக்கு செலுத்தினால் போதுமானது என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் இனி அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து பயன்படுத்தலாம். தமிழகத்தில் குறிப்பிட்ட வகை கார்களை மட்டும் தான் வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்று இருந்த விதி தற்போது மாறியுள்ளது. 


இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுற்றுலா மேம்பாட்டு நோக்கில் சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




பிற மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் இது அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இனிமேல் சொந்த வாகனங்களை சுற்றுலா நோக்கில் பயன்படுத்த விரும்பினால் அதற்குரிய கட்டணத்தைக் கட்டி லைசென்ஸ் வாங்கிக் கொண்டு பயன்படுத்தலாம்.


இந்த உத்தரவு காரணமாக டாக்சிகள், கேப்களுக்கான பற்றாக்குறை முடிவுக்கு வரும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் வைத்திருப்போர், அதில் ஒன்றை டாக்சி போல மாற்றி பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Budget 2025: 100 புதிய விமான நிலையங்கள்.. ஹீல் இந்தியா திட்டம்.. முக்கிய அறிவிப்புகள்

news

Budget 2025: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்புக்கு இடையே தாக்கலானது மத்திய பட்ஜெட்

news

சீட் கிடைக்காத கோபம்.. 8 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா.. தேர்தல் நேரத்தில் ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலி

news

பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரெடி... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயார்... இன்று என்ன நடக்கும் ?

news

Budget 2025: பட்ஜெட் நாளில் ரூ.7 குறைக்கப்பட்ட கமர்ஷியல் சிலிண்டர் விலை

news

மத்திய பட்ஜெட் 2025: 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மத்திய பட்ஜெட் 2025 : எந்த பொருட்களின் விலை குறைய-உயர வாய்ப்பு.. சர்பிரைஸ் தருவாரா அமைச்சர் நிர்மலா?

news

சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்