சென்னை: அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி பட டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. மைத்ரீ மூவீஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. சரியாக நேற்று மாலை 7.03 மணிக்கு டீசர் ரிலீஸ் ஆனது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையங்குகளில் திரையிடப்பட்டது. டீசர் மரண மாஸாக இருந்ததால், அதனைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டர்களில் ஒன்ஸ் மோர் , ஒன்ஸ் மோர் என கேட்டதால், பல திரையரங்குகளில் திரும்ப திரும்ப திரையிடப்பட்டது. மேலும், டீசர் முழுவதும் அஜித் குமார் தான் இருக்கிறார், அவருக்கான மாஸா காட்சிகள், டயலாக்குகள் என மொத்த டீசரும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததுள்ளது என்றே சொல்லலாம்.
இந்த டீசர் வெளியாகிய 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவேலைக்கு பிறகு அஜித்குமார் டானாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டீசர் முழுக்கவும் எனர்ஜி மற்றும் அஜித் சாரின் லுக்கில் டார்க் ஷேட் வெளிப்படுகிறது. இயக்குனர் ஆதிக் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}