நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட..வயநாடு மக்களுக்கு 3 நாட்களுக்கு இலவச சேவை.. ஏர்டெல்

Aug 01, 2024,12:05 PM IST

வயநாடு:   நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில் வேலிடிட்டி முடிவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு மூன்று நாள் இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எஸ் எம் எஸ் போன்றவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.


தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல் மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது .அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இந்த நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ‌இதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி இதுவரை ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதேபோல் பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. 




இருப்பினும் தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர்  மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அனைத்து உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.


இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து பல மாநிலங்களும் கேரளா அரசுக்கு உதவ முன்வந்துள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏர்டெல் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மொபைல் போன் வேலிடிட்டி முடிந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு மூன்று நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் எனவும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்