மீண்டது விமான நிலையம்.. தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது விமான சேவை!

Dec 20, 2023,12:47 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியதினால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பின்னர் இன்று விமான சேவை தொடங்கப்பட்டது.


தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கி விட்டது. இன்னும் கூட பெரும்பாலான இடங்களில் நீர் வடியவில்லை. இங்குள்ள மக்கள் மின்சாரம், போக்குவரத்து,ரயில் சேவை, விமான சேவை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். மழையின் தாக்கம் குறைந்ததினால், மீட்பு குழுவினர்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.


மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. தேங்கிய தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாததினால் அதற்குரிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் தூத்துக்குடியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 




தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 3 விமானங்கள் வந்து போய் கொண்டு இருந்தது. இந்த சேவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் விமான நிலையத்தையும் விட்டு வைக்காது அங்கும் தேங்கியது.


இந்த கனமழை காரணமாக சென்னை- தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்று மழை முழுவதும் குறைந்த  வானிலை சீராகாத காரணத்தினால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இன்று வானிலை ஓராளவு சீரான நிலையில் சென்னை-தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்