ஏர் இந்தியா விமானத்தில் அசிங்கம்.. பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு.. ஒரு மாத பயணத் தடை!

Jan 05, 2023,10:03 AM IST

புதுடில்லி : ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி மீது, குடி போதையில் இருந்த சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததற்காக அந்த போதை ஆசாமிக்கு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 26 ம் தேதி நியூயார்க்கில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிசினஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்துள்ளார்.  இரவு உணவிற்கு பிறகு குறைவான வெளிச்சம் கொண்ட விளக்குகள் மட்டுமே எரிய விடப்பட்டுள்ளன. அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த போதை ஆசாமி, அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராக வந்து சிறுநீர் கழித்துள்ளார்.




மற்றொரு பயணி நகர சொல்லும் வரை அந்த நபர் அதே இடத்திலேயே நின்றுள்ளார். இச்சம்பவம் பற்றி விமான ஊழியர்களிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தன்னுடைய உடை, ஷூ, பை என அனைத்தும் சிறுநீரால் நனைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் விமான ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு வேறு உடை, செருப்பு போன்றவற்றை மாற்றிக் கொடுத்து, வேறு இடம் காலியாக இல்லாததால் அதே இருக்கையில் மீண்டும் உட்காரச் சொல்லி உள்ளனர்.

விமானம் டில்லியில் தரையிறங்கிய பிறகும் அந்த போதை நபர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், ஏர் இந்தியா குழுமத்தின் தலைவர் சந்திரசேகருக்கே புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இப்படி ஒரு அதிர்ச்சியான விமான பயணத்தை தான் சந்தித்தது இல்லை என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையில் தற்போது அந்த போதை ஆசாமிக்கு ஒரு மாதம் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை எப்போது விதிக்கப்பட்டது, எப்போது வரை நீடிக்கும் என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் இது முதல் கட்ட தண்டனை தான் என்றும் அடுத்த கட்டமாக விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் 2018 ம் ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவத்திற்காக ஏர் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. அதுவும் நியூயார்க்கில் இருந்து டில்லி வந்த விமானத்தில் தான் நடந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா குழுமத்திற்குச் சொந்தமானது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்

news

தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு

news

ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!

news

தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

news

சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?

news

பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!

news

தீபாவளியை முன்னிட்டு திடீர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி!

news

சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து

news

சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்