மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வந்த சந்திரப்பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை காரணமாக பதட்டம் நிலவுவதால் அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரப்பாண்டியன். இவரது சொந்த ஊர் மாவூத்துப்பட்டி ஆகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
இவரது மகள் வீடு லிங்கவாடியில் உள்ளது. மகளைப் பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து டூவீலரில் போயுள்ளார் சந்திரப்பாண்டியன். பாலமேட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக சந்திரப்பாண்டியனை அரிவாளால் வெட்டியது. இதில் சந்திரப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலமேடு போலீஸார் விரைந்து வந்து சந்திரப்பாண்டியன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை. ஆனால் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவூத்துப்பட்டியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}