சென்னை: தமிழக முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உயர்தர அதிநவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கு அனுபவத்தை குறைந்த செலவில் தர வேண்டும் என்ற நோக்கில் ஏஜிஎஸ் குழுமம் இன்று முதல் கடலூரில் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடங்கியுள்ளது.
இந்தத் திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பில் ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
ஏஜிஎஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு பணிகளை தொடர்ந்து, தற்போது கடலூரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்குகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரையரங்குகளை ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் கால் பதித்தது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தலைமையில், ஏஜிஎஸ் குழுமம் தற்போது சென்னை மகாபலிபுரம் சாலை, தி.நகர், மதுரவாயில், உள்ளிட்ட பல பகுதிகளில் 18 ஸ்கிரீன்களைக் கொண்ட திரையரங்குகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது கடலூரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா தியேட்டர் புதுப்பொலிவுடன் தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பாக ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
கண் கவரும் 4கே டிஜிட்டல் ஸ்கிரீன், காதுகளுக்கு விருந்தளிக்கும் டால்பி அட்மாஸ் சவுண்ட் என அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் உலகத்தரம் வாய்ந்த தியேட்டராக இது மாற்றப்பட்டுள்ளது.
கடலூர் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடர்ந்து தமிழக முழுவதும் ரசிகர்களுக்காக குறைந்த செலவில் திரையரங்கு அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும்.. வானிலை மையம்
திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை: திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்ட பதில்!
இமைகளின் இசையில் இளைப்பாறி.. இதழ்களின் இடையில் .. உதயமாகிறேன் (கவிதை)
நிலநடுக்கம்... மியான்மரில் பலி எண்ணிக்கை 1,000த்தை கடந்தது!
மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில்.. விரைவில் ஆலய நுழைவுப் போராட்டம்.. சீமான் அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் என டெல்லி பயணம்!
உகாதி திருநாள்.. தெலுங்கு, கன்னடப் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகும் மக்கள்
Elon Musk sells X.. வேற லெவலுக்கு மாறப் போகும் எக்ஸ் தளம்.. எக்ஸ்ஏஐ-யிடம் விற்ற மஸ்க்!
{{comments.comment}}