சென்னை: தமிழக முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உயர்தர அதிநவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கு அனுபவத்தை குறைந்த செலவில் தர வேண்டும் என்ற நோக்கில் ஏஜிஎஸ் குழுமம் இன்று முதல் கடலூரில் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடங்கியுள்ளது.
இந்தத் திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பில் ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
ஏஜிஎஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு பணிகளை தொடர்ந்து, தற்போது கடலூரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்குகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரையரங்குகளை ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் கால் பதித்தது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தலைமையில், ஏஜிஎஸ் குழுமம் தற்போது சென்னை மகாபலிபுரம் சாலை, தி.நகர், மதுரவாயில், உள்ளிட்ட பல பகுதிகளில் 18 ஸ்கிரீன்களைக் கொண்ட திரையரங்குகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது கடலூரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா தியேட்டர் புதுப்பொலிவுடன் தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பாக ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
கண் கவரும் 4கே டிஜிட்டல் ஸ்கிரீன், காதுகளுக்கு விருந்தளிக்கும் டால்பி அட்மாஸ் சவுண்ட் என அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் உலகத்தரம் வாய்ந்த தியேட்டராக இது மாற்றப்பட்டுள்ளது.
கடலூர் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடர்ந்து தமிழக முழுவதும் ரசிகர்களுக்காக குறைந்த செலவில் திரையரங்கு அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை
கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!
மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!
35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி
வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்
தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!
சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?
சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!
{{comments.comment}}