சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, பதுங்கு குழி பழனிச்சாமி என்று விமர்சித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டி. ஜெயக்குமார் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவு:
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.
அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)
தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்.
இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் குரலாகத் தான் இருக்கும்!
இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுக தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"!
தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே!
டப்பிங் இல்லாமல் நேரடியாக பதில் சொல்வாரா பதுங்குகுழி பழனிச்சாமி.. அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது!
இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!
கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
புதிய கல்வி கொள்கை மகாராஷ்டிராவில் அமல்... இனி இந்தி மொழி பாடம் கட்டாயம்!
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பொங்கிய முன்னாள் அமைச்சர்
போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!
தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம்.... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்வு!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி.. தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை..!
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது.. தமிழக அமைச்சரவை கூட்டம்..!
அமெரிக்க வருமான வரியில் மாற்றம் : டிரம்ப்பின் புதிய நடவடிக்கையால் மக்கள் கலக்கம்
ஏன் தேவை மாநில சுயாட்சிக் குழு..? முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்து கடிதம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}