புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.. ஆதித்யா எல்1!

Sep 02, 2023,11:28 AM IST

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் வகையில் இந்தியா வடிவமைத்துள்ளஆதித்யா எல் 1 விண்கலம் இன்று பகல் 11.50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.


சந்திரயான் 3 திட்ட வெற்றிக்குப் பின்னர் உலகின் கவனம் இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் மீது படிந்துள்ளது. இது சூரியனை ஆய்வு செய்ய இந்தியா வடிவமைத்துள்ள விண்கலமாகும். விண்வெளியில்  லாக்ரேஞ்ச் 1 பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும்.





விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு விண்வெளி ஆய்வில் ஈடுபடும் முதல் இந்திய விண்கலம் என்ற பெருமையும் ஆதித்யாவுக்குக் கிடைத்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதி குறித்த ஆய்வில் ஆதித்யா எல் 1 ஈடுபடும்.  மேலும் சூரியனைச் சுற்றியுள்ள ஹாலோ குறித்தும் அது ஆய்வு செய்யும். லாக்ரேஞ்ச் பகுதி குறித்த ஆய்வையும் ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.


ஆதித்யா விண்கலமானது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட விண்கலமானது, திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் கொண்டு சென்று விடப்பட்டது. இனி அங்கிருந்து விண்கலமானது, லாக்ரேன்ஜ் 1 பகுதியை நோக்கி பயணிக்கும்.  அந்த இடத்தில் பின்னர் நிலை நின்று சூரியனை ஆய்வு செய்யும்.


ஆதித்யாவை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி ராக்கெட் அதி நவீனமானதாகும். முந்தைய பிஎஸ்எல்வியை விட இது நவீனமானது. எக்எஸ்எல் வகை பிஎஸ்எல்வி ராக்கெட் இது.  இதே வகை ராக்கெட்தான் முன்பு சந்திரயான் 1 விண்கலத்தையும் விண்ணில் செலுத்த உதவியது என்பது நினைவிருக்கலாம்.  அதேபோல 2013ம் ஆண்டு மூன் ஆர்பிட்டரையும் இதுதான் விண்ணில் செலுத்தியது.


சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்