பொய்யான வதந்திகளை பரப்பாதீங்க.. மன்னிப்பு கேளுங்க.. நடிகை சிம்ரன் திடீர் ஆவேசம்!

Sep 22, 2024,04:10 PM IST

சென்னை: தன்னைப் பற்றி தேவையில்லாமல் பொய்யான வதந்திகளை சிலர் பரப்புவதாக கோபம் காட்டியுள்ளார் நடிகை சிம்ரன். இதுபோன்று தவறான செய்திகளைப் பரப்புவோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


20 வருடங்களுக்கு முன்பு முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். விஜய், அஜீத்,  பிரஷாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக விஜய், அஜீத், பிரஷாந்த்துடன் இவர் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட்டானவை. 


அழகிய நடனத்திற்கும், அட்டகாசமான நடிப்புக்கும் பெயர் போன சிம்ரன் தற்போது நல்ல நல்ல பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தகன் படத்தில் சூப்பரான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். விஜய்யுடன் அவரது கடைசிப் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 


இந்த நிலையில் நடிகை சிம்ரன் எக்ஸ்  தளத்தில் ஒரு காட்டமான பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




உணர்வுப்பூர்மாக உங்களை எப்படியெல்லாம் சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மன வேதனையாக உள்ளது. இதுநாள் வரை நான் என்னைப் பற்றி வெளியான வதந்திகளுக்குப் பதில் அளிப்பதை தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - எந்த ஒரு முன்னணி ஹீரோவுடனும் இணைந்து நடிக்க நான் பதட்டப்படவில்லை, வேகம் காட்டவில்லை. முன்பு அவர்களுடன் நடித்தேன், அவ்வளவுதான். 


இப்போது எனது இலக்குகள் தெளிவாக உள்ளன. ஒரு பெண்ணாக, எனது எல்லைகள் குறித்து எனக்குத் தெரியும். பல வருடங்களாக எனது பெயர் எப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் வருகிறதோ அப்போதெல்லாம் நான் அமைதியாகவே இருந்தேன். யாருடனாவது இணைத்து என்னைப் பற்றி பேசி வருகிறார்கள். முதலில் சுய மரியாதை முக்கியம். இப்படி வதந்தி பேசுவதை முதலில் நிறுத்துங்கள். இதை சக்தி வாய்ந்த குரலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். யாருமே இந்த வதந்திகளை தடுத்து நிறுத்த முன்வரவில்லை, யாருமே எனது உணர்வுகள் குறித்துக் கவலைப்படவில்லை.


எது சரியோ அதைத்தான் நான் செய்வேன். எது சரியோ, அதன் பக்கம்தான் நான் நிற்பேன். எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் தேட மாட்டேன். இந்த உணர்வை திரைத்துறையைச் சேர்ந்த அறிவார்ந்த மக்களிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். தவறான, அவதூறான வதந்திகளைப் பரப்புவோர் உடனடியாக இதை நிறுத்தி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிம்ரன்.


சிம்ரன் திடீரென இவ்வாறு கோபமாக பேச என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் நடிகர் விஜய்யிடம், அவரை வைத்து படம் தயாரிக்க சிம்ரன் அணுகியதாகவும், ஆனால் அதை விஜய் ஏற்கவில்லை என்றும், பதிலாக அவருக்கு தயாரிப்பெல்லாம் எதற்கு, அதெல்லாம் பெரிய தலைவலி, பேசாமல் நிம்மதியாக இருங்க என்று விஜய் அட்வைஸ் கொடுத்ததாகவும் சில யூடியூபர்கள் பேசியுள்ளனர். இதுதான் சிம்ரனை கோபப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்