நடிகர் கார்த்தி நல்ல பிள்ளை.. ரவுடிசம் செய்து வருகிறார் பவன் கல்யாண்.. நடிகை ரோஜா பாய்ச்சல்

Sep 30, 2024,06:08 PM IST

சென்னை:  நடிகர் கார்த்தி நல்ல பிள்ளை. அவர் லட்டு குறித்து தப்பாகவே பேசலை. பவன் கல்யாண் மிரட்டலுக்குப் பயந்து போய், நமக்கு எதுக்குடா இந்த அரசியல் என்று ஸாரி கேட்டார். அவர் ஸாரி கேட்கவே தேவையில்லை. பவன் கல்யாணம் ரவுடிசம் செய்து வருகிறார் என்று நடிகையும், முன்னாள் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா கூறியுள்ளார்.


திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகை ரோஜா சன் செய்திகள் சானலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:




நடிகர் பிரகாஷ் ராஜ் திருப்பதி லட்டு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் மிகவும் கரெக்டாகத்தான் பேசி வருகிறார். அதேபோல லட்டு விவகாரம் தொடர்பாக கார்த்தியிடமும் கேட்டனர். அதற்கு அவர் பதில் கொடுத்திருந்தார். பாவம் நல்ல பிள்ளை. நமக்கு எதுக்கு இந்த அரசியல் என்று ஸாரி சொன்னார். அவர் ஸாரி சொல்லவே தேவையில்லை. ரவுடிசம் செய்து பவன் கல்யாண் கார்த்தி, பிரகாஷ் ராஜையே மிரட்டுகிறார் என்றால் ஆந்திராவில் எப்படி மிரட்டுவார் என்பதைப் பாருங்கள்.


யார் என்ன பேசுகிறார்கள் என்று கூட காது கொடுத்துக் கேட்காமல் மிரட்டுகிறார்கள். சந்திரபாபு நாயுடு நிறைய பொய் பேசுவார். அவருக்கு இது புதிதல்ல. இதற்கு முன்பு நிறையப் பேசியுள்ளார். நாயுடு இயக்கத்தில் பவன் கல்யாணம் ஆக்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சை யாராவது மொழி பெயர்த்துக் கேட்டுப் பாருங்கள். சம்பந்தமே இல்லாமல் பேசியிருப்பார்.


ஆந்திராவை ஏற்கனவே இரண்டாக பிரித்து விட்டார் சந்திரபாபு நாயுடு. இதனால் மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். எங்களது ஒரே அடையாளமாக இருந்தது பெருமாள்தான். இப்போது அவரது பெயரையும் கெடுத்து விட்டார் சந்திரபாபு நாயுடு. மக்கள் கடும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் உள்ளனர்.


வழக்கமாக ஒரு ஆட்சி வந்தால் ஒன்று அல்லது 2 வருடங்களில்தான் மக்களுக்கு அதிருப்தி கோபம் வரும். ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு அரசு மீது மக்களுக்கு அதிருப்தி வந்து விட்டது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எதையோ நினைத்து திருப்பதி லட்டு விவகாரத்தைக் கிளப்பினார் சந்திரபாபு நாயுடு. ஆனால் தற்போது அது அவருக்கே எதிராகத் திரும்பி விட்டது என்றார் நடிகை ரோஜா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்