சென்னை: இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் ஆந்திர மாநில அமைச்சரும், ஆர். கே. செல்வமணியின் மனைவியுமான நடிகை ரோஜா.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநரானவர். இவர் இயக்கிய முதல் படமான புலன் விசாரணை மிகப் பெரிய ஹிட்டடித்தது. இது ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையாகும். முதல் படமே ஹிட்டானதால் அனைவராலும் பார்க்கப்படும் இயக்குநராக மாறினார் ஆர்.கே. செல்வமணி. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதன் பிறகு செம்பருத்தி என்ற வித்தியாசமான காதல் கதையைப் படமாக்கினார் ஆர்.கே.செல்வமணி. இதில்தான் தனது காதல் மனைவி ரோஜாவை நடிகையாக அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து அரசியல், காதல் என்று மாறி மாறி டிராவல் செய்து வந்த அவர் கடைசியாக 2015ம் ஆண்டு புலன் விசாரணை 2 படத்தை இயக்கினார். இடையில் ஒரு படத்தில் நடிக்கவும் செய்தார். இன்று ஆர்.கே. செல்வமணிக்கு 57வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவரது மனைவி ரோஜா தடபுடலான பிறந்த நாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரமாண்ட கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரோஜா, ஆந்திர மாநில அரசியலில் முக்கியமான ஒரு பிரமுகராக வலம் வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான அவர் அமை்சசராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}