சென்னை: எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. அப்படி சினிமா துறையில் வாய்ப்புகள் வரும்போது 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் கால் பதிக்க ஆரம்பித்து வரும் மகிழ்ச்சியான தருணத்தை நம்முடன் பகிர்ந்து பேசியுள்ளார் பிக் பாஸ் புகழ் பூர்ணிமா ரவி.
இந்த உலகத்தில் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தவர்கள் ஏராளம். அப்படி திறமையானவர்கள் சாதிக்க சினிமா துறையிலும் இடம் உண்டு. சினிமா துறையில் நல்ல இடம் கிடைக்கும்போது, அதனை சரியாக பயன்படுத்த நடிகர்கள் தயங்க மாட்டார்கள்.
இப்படியாக சிறிய ரோல்கள் முதல் சவாலான பெரிய ரோல்கள் வரை நடித்து சாதித்தவர்கள் அதிகம் என்றே சொல்லலாம். அந்த வரிசையில் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தனது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க ஆரம்பித்து வருகிறார் நடிகை பூர்ணிமா ரவி.
நடிகை பூர்ணிமா ரவி ஆரம்பத்தில் ஐடி துறையில் பணிபுரிந்தவர். சினிமாவில் உள்ள ஆர்வத்தால் ஆராதி என்ற youtube சேனலை ஆரம்பித்து டான்ஸ் மற்றும் பல விஷயங்களை பதிவிட்டு வந்தார். இதன் மூலம் ஒரு சிறந்த youtubeபராக அறியப்பட்டார். 2021 ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ரவி. இவர் நடிப்பில் வெளியான செவப்பி மற்றும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பின் திறமையால் கவனம் ஈர்த்தவர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 ரியாலிட்டி ஷோ மூலம் ஒரு கண்டஸ்டண்டாக பங்கேற்று பிரபலமானவர். இந்த நிலையில் நடிகை பூர்ணிமா ரவிக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். அதனை நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு பிடித்த நடிகர் தனுஷ். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லை வரைக்கும் சென்று நடிப்பது என்னை ஆச்சர்யப்பட வைத்தது. பக்கத்து வீட்டுப் பையன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கூட திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள்.
இதே போன்ற நடிப்புத் திறமையை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருக்கிறது. ஹீரோயின் மெட்டீரியல் என்று சினிமாவில் எதுவும் இல்லை. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}