சென்னை: சமீப காலமாக தனக்கு பணம் தாராளமாக செலவழிப்பதாக தவறான செய்திகள் வைரலாகி வருவதாகவும், ஒரு குடும்பத்தை கெடுப்பதற்கு முன் தகவல்கள் சரியானதா என்பதை சரி பார்த்து பரப்புங்கள் எனவும் மிகவும் வருத்தத்துடன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமிழ் திரை உலகில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் டிக் டிக், தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி கார் பந்தயத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனியார் விளையாட்டு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பேட்மிட்டன் போட்டியில் கலந்துகொண்டு பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் களையும் குவித்து வருபவர்.
தவறான தகவல்கள் பரப்புவது ஏன்? : இந்த நிலையில் சமீப காலமாக தனக்கு யாரோ சிவலர் தாராளமாக பண செலவிடுவதாக தவறான தகவல்கள் வைரலாகி வருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றிப் பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனம்விட்டுக் கெடுக்கும் முன்பு, அவர்கள் பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதற்குச் சில மனிதாபிமானம் இருக்கும் என்று நினைத்து தான் நான் அமைதியாக இருந்தேன். நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன்பு யோசியுங்கள்.
கண்ணியமான குடும்பம்: நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும், நிலையானதாகவும் இருக்கிறேன். எனது குடும்பம் தற்போது துபாயில் வசிக்கிறது. நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம். திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரையோ, ஹீரோவிடம் நடிக்கவோ, பட வாய்ப்புகளை தரும்படியோ கேட்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன், அதுதான் என்னைக் கண்டுபிடித்தது.
பேராசை கொள்ளாதவள் நான்: நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொள்ள மாட்டேன். என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் பந்தயமே எனது விருப்பமாக இருந்து வருகிறது. உண்மையில் சென்னையில் நடத்தப்படும் பந்தயங்கள் பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் பார்ப்பது போல் நான் ஆள் கிடையாது. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்துகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். நான் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.
அவதூறு பரப்பாதீர்கள்: உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே. நான் இதை சட்டரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது.அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து, எங்கள் குடும்பத்தை மேலும் எந்த அதிர்ச்சியிலும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உண்மை காணட்டும் என பதிவிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்
பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!
குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது
மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!
முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி
தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!
BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!
64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!
என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!
{{comments.comment}}