சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரித்தார். அப்போது தாமரை மலரும் தமிழ்நாடும் வளரும் என்று முழங்கினார் அவர்.
நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொகுதியில் இந்த மக்களவை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, திமுக சார்பில் சிட்டிங் எம்பி கலாநிதி வீராசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் பால்கனராஜை ஆதரித்து நடிகை நமிதா பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு பெரிய பேப்பரில் தனது பிரச்சாரப் பேச்சை எழுதி வைத்திருந்தார் நமிதா. அதைப் பார்த்தபடி அவர் பேசினார். தமிழிலேயே பேசினார். கொஞ்சும் தமிழில் நமிதா பேசியதாவது:
பாஜக, மீனவர்களுக்காக ரூ.39000 கோடியை கொடுத்துள்ளது. எல்லாருக்கும் நிறைய வீடு கட்டி கொடுத்திருக்காங்க, பாத்ரூம் கட்டி கொடுத்திருக்காங்க. நம்முடைய வேட்பாளர் பால்கனகராஜ் நன்றாக படித்தவர். உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்தவர். சட்டம் படித்தவர், நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்தவர். உங்க கஷ்டத்தை நன்றாக புரிந்தவர். உங்களுக்காக ஒருவர் உங்களில் ஒருவர்.
பார் கவுன்சில் சங்கத்தில் 4 முறை தலைவராக இருந்தவர். நீங்கள் தைரியமாக நம்பி பால்கனராஜுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்க. 24 மணி நேரம் பாதுகாப்பாக இருப்பாரு. தாமரை மலரும் தமிழ்நாடும் வளரும். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு யாரு யாரு எல்லாம் வேலை பார்க்கிறார்களோ அங்க எல்லாம் நல்லா இருப்பாங்க என்று கூறி வாக்கு சேகரித்தார் நமிதா.
நமிதா பிரச்சாரத்திற்கு வந்ததால் அவரை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}