சென்னை: நடிகை நமீதா மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.
நடிகை நமீதா துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர், இரட்டைக் குழந்தைகளுடன் நமீதா அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. இந்த வெள்ளத்தால் துரைப்பாக்கம் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது.
இதில் நமீதா வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பும் சிக்கிக் கொண்டது. அங்கு இடுப்புக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படைக்குத் தகவல் போனது. இதையடுத்து இன்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். நமீதா குடும்பத்தினர் மற்றும் அங்கு வசித்து வரும் பலரையும் மீட்டு படகு மூலம் வெளியே கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நமீதா கூறுகையில், அக்கம் பக்கத்தினர் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டோம். அந்தக் குடியிருப்பிலேயே நாங்கள்தான் கடைசியாக இப்போது மீட்கப்பட்டுள்ளோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு நன்றி என்றார் நமீதா. நமீதா, கணவர், குழந்தைகள் தவிர அவர் வளர்த்து வரும் நாய்களும் கூட பத்திரமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டன.
ஏற்கனவே இதேபோல இந்தி நடிகர் அமீர் கான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரையும் வெள்ள பாதிப்பிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டது நினைவிருக்கலாம்.
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
விழுப்புரத்தில்.. மே 15க்குள் தமிழில் பெயர் பலகைகள் மாற்ற வேண்டும்.. மாவட்ட கலெக்டர் உத்தரவு!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
உலக சுகாதார தினம்.. ஆரோக்கியமான ஆரம்பம்.. நம்பிக்கையான எதிர்காலம்!
டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில்.. சீமானுக்கு கெடு விதித்த.. திருச்சி குற்றவியல் நீதிமன்றம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
{{comments.comment}}