கவுதமி, தடா பெரியசாமிக்கு முக்கியப் பதவி.. பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக மெசேஜ்!

Oct 21, 2024,05:16 PM IST

சென்னை: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.


நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்து பணியாற்றி வந்தார். விருதுநகர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தொகுதியிலேயே தங்கியும் பணியாற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவருக்கு பல ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் பாஜக தராத நிலையில், 2021ம் ஆண்டு தேர்தலிலாவது சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். அப்போதும் அவருக்கு சீட் எதுவும் பாஜக வழங்கவில்லை. 


இந்த நிலையில், தன்னுடைய சொத்து பிரச்சனை மற்றும் தனக்கு ஏற்பட்ட மனகசப்பு உள்ளிட்ட காரணங்களினால் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அத்துடன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டார்.




அதேபோல  பாஜகவில் எஸ்சி அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமியும் மக்களவை தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கவுதமி மற்றும் தடா பெரியசாமி பாஜக கட்சியில் இருந்து விலகி நிலையில், அவர்களுக்கு தற்போது எடப்பாடி கே பழனிச்சாமி முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்படுகிறார். இதேபோல அதிமுக சிறுபான்மையின நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய பதவிகளை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே பாஜக தகவல் தொழில்நுட்ப அணியிலிருந்து நிர்மல்குமார் உள்ளிட்டோர் அதிமுக பக்கம் வந்து பதவிகளைப் பெற்றனர். பாஜகவுடன் உரசல் இருந்து வரும் நிலையில் அங்கிருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கியப் பதவிகள் கிடைத்திருப்பது பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி  கொடுத்துள்ள மறைமுக மெசேஜ் ஆக பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்