மும்பை சென்சார் போர்டு லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார்

Sep 28, 2023,06:48 PM IST

சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் இந்திப் பதிப்புப் படத்தைப் பார்க்கவும், அதற்கு சான்றிதழ் தரவும் மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ. 6.5 லட்சம் வாங்கியதாக நடிகர் விஷால் புகார் கூறியுள்ளார்.


விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில்,  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட்டுள்ளனர். இந்திப் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு தான் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக விஷால் பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார்.




இதுதொடர்பாக ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சினிமாவில் ஊழலைக் காட்டினால் தவறில்லை. ஆனால் நிஜத்தில் ஊழல் நடப்பது தவறானது. அதை ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக அரசு அலுவலகங்களில். மும்பை மத்திய திரைப்படத் தணிக்கை அலுவலகத்தில் நடப்பது மிகவும் மோசமானது. மார்கா ஆண்டனி இந்திப் பதிப்புக்காக நான் ரூ. 6.5 லட்சம் லஞ்சம் தர நேரிட்டது.


2 முறை இந்தப் பணத்தை நாங்கள் கொடுத்தோம். படத்தைப் பார்ப்பதற்காக ரூ. 3 லட்சம், படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்கு ரூ. 3.5 லட்சம் என கொடுத்தோம்.  எனது வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவத்தை நான் சந்தித்ததே இல்லை. படம் திரைக்கு வந்தாக வேண்டிய நிலையில் இருந்ததால், வேறு வழியில்லாமல் பணத்தை மீடியேட்டர் மேனகா மூலம் கொடுக்க வேண்டியதாயிற்று.




மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எனது பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன். எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு இதுபோல நடக்கக் கூடாது என்பதற்காக இந்த ஊழலை அம்பலப்படுத்தியுள்ளேன். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இப்படி ஊழலுக்காக வீணடித்தது வேதனையாக உள்ளது. ஆதாரங்களையும் நான் இணைத்துள்ளேன். சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.


யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் தரப்பட்டது, எந்த வங்கிக் கணக்கில் அந்தப் பணம் போடப்பட்டது போன்ற விவரங்களையும் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார் விஷால். நடிகர் விஷாலின் இந்தப் புகார் திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்