சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த வாரம் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் விஜய் அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்து விட்டார். மீண்டும் ஒரு கோலாகலமான விழாவாக இது நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் 10 மற்றும் 12 வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தடுக்க இந்த வருடம் கல்வி விருது வழங்கும் விழாவை இரண்டு கட்டமாக நடத்த தமிழகம் வெற்றிக் கழகம் திட்டமிட்டது.
அதன்படி முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த வாரம் 28ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் 725 மாணவர்கள் உட்பட மொத்தம் 3500 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கட்சி கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதற்காக நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதிகாலையிலேயே வந்து விட்டார். தற்போது விஜய் பேசி வருகிறார். இதையடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்
என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!
{{comments.comment}}