பொன்‌ ஒன்று கண்டேன்..நேரடியாக டிவியில் ஒளிபரப்புவது வேதனை.. அதெல்லாம் தப்புங்க..வசந்த் ரவி புலம்பல்!

Mar 15, 2024,04:14 PM IST

சென்னை: பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற செய்தியை சமூக வலைத்தளத்தின் மூலம் அறிந்து ஒட்டுமொத்த படகுழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என கூறி, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜியோ ஸ்டுடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அப்படத்தின் ஹீரோவான, நடிகர் வசந்த் ரவி.


நடிகர் வசந்த் ரவி பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இப்படத்தின் மூலம் பலரது பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜியோ ஸ்டுடியோ மற்றும் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில்,  பொன்னொன்று கண்டேன் திரைப்படம் உருவாகியுள்ளது. கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா  இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் நடிகர்கள் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.




இந்த நிலையில் பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வரும் மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற ப்ரோமோ அறிவிப்பு சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்து  படக்குழுவினர் மற்றும் நடிகர் வசந்த் ரவி  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதற்காக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறியுள்ளதாவது:


அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மைதானா? ஜியோ ஸ்டுடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.


இந்த படத்திற்காக கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு குறித்து எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ ஸ்டுடியோஸ்.


ஒரு நடிகனுக்கோ அல்லது கலைஞனுக்கோ வணிக ரீதியான தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுகளில் தலையிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்