வையாபுரி வீட்டில் வைத்த கொலு.. பாடுனாதான் சுண்டல் .. கலகலப்புடன் பெருக்கெடுத்து ஓடிய இசை வெள்ளம்!

Oct 11, 2024,12:09 PM IST

சென்னை: நகைச்சுவை நடிகர் வையாபுரி வீட்டில் வைத்த இந்த வருட நவராத்திரி கொலுவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வருகை தந்து பாட்டெல்லாம் பாடி அசத்தியுள்ளனர். 


தமிழ்த் திரையுலகில் மிகவும் நீட்டான ஒரு நடிகராக அறியப்படுபவர் வையாபுரி. எதார்த்தமான மனிதர். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் மிக்கவர். தேவையில்லாமல் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவரும் கூட.



வழக்கமாக அவரது வீட்டில் நவராத்திரியையொட்டி கொலு வைப்பார்கள். இந்த வருடமும் அப்படி கொலு வைத்திருந்தனர். இந்த முறைய நிறைய விஐபிக்களையும் அவர் அழைத்திருந்தார். அதில் பாடகர் வீரமணி ராஜுவும் ஒருவர். இவர் ஐயப்பன் பாடல்களுக்குப் பெயர் போனவர். கேரள மாநில அரசின் ஹரிவராசனம் விருதைப் பெற்றவர்.


வையாபுரி வீட்டுக்கு வந்திருந்த வீரமணி ராஜு, கொலுவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் தனது குரலில் பாடி பிரபலமான பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடலை பக்தி மணம் கமழ பாடி அனைவரையும் மகிழ்வித்தார். சும்மா சொல்லக் கூடாது.. அவரது பாடலால் கொலுவே மிகவும் பக்தி மயமாக மாறிப் போய் விட்டது.




இதேபோல நடிகர் சாம்ஸும் தனது குடும்பத்தோடு வருகை தந்து மகிழ்வித்தார். அவரையும் வையாபுரியின் மனைவி பாட்டுப் பாடச் சொன்னார். பாடினால்தான் சுண்டல் கிடைக்கும் என்று சொல்லவே, விடுவாரா சாம்ஸ்.. சூப்பராக பாட்டுப் பாடி அசத்தி விட்டார். நேர்த்தியான முறையில் அவர் பாடிய பக்திப் பாடல் அனைவரையும் கவர்ந்தது.


கொலு நிகழ்ச்சியில் நடிகர் பூவிலங்கு மோகனும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டு வையாபுரி குடும்பத்தாரை மகிழ்வித்தனர். நவராத்திரி விழாவின் 9வது நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்