ரூ. 120 கோடியில் தனி விமானமா.. அதெல்லாம் சுத்தப் பொய்.. நடிகர் சூர்யா தரப்பு திட்டவட்ட மறுப்பு!

Aug 23, 2024,05:07 PM IST

சென்னை: நடிகர் சூர்யா ரூ. 120 கோடி மதிப்பில், சொந்தமாக தனி விமானம் வாங்கினதாக தகவல்கள் வெளியான நிலையில், இது சுத்தப் பொய்யான செய்தி. அவர் விமானம் வாங்கவில்லை என்று சூர்யா தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய அசாத்தியமான நடிப்பால் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இதனால் இவருக்கென்ற தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. நடிகர் சூர்யா கடைசியாக நடித்த படம்  எதற்கும் துணிந்தவன். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 




இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் ‌இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக தயாராக உள்ளது. 3d தொழில்நுட்பம் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாக உள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது அடுத்த படமான 44வது படத்தில் கமிட்டாகியுள்ளார். ஷூட்டிங்கும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே  நடிகர் சூர்யா தனி ஜெட் விமானம் ஒன்றை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் இதன் விலை 120 கோடி எனவும், தமிழ் சினிமாவிலேயே சூர்யா தான் விலை உயர்ந்த தனி விமானத்தை  வைத்திருப்பதாகவும் வதந்திகள் காட்டுத் தீயாய் பரவி வந்தன.


இந்த நிலையில் இந்தத் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில்  சொந்தமாக தனி விமானம் வாங்கியுள்ளார் என்பதற்கு அவரது தரப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த தகவலில் துளி கூட உண்மை தன்மை இல்லை என நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்