ஈஷா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.. தியானத்தில் தமன்னா.. கலங்கிப் போன சந்தானம்!

Mar 09, 2024,12:23 PM IST

கோவை: கோவை உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட தமன்னா மற்றும் சந்தானம் ஆகியோர் அழுத கண்களுடன் உருக்கமாக பங்கேற்றனர்.


மகா சிவராத்திரி என்றாலே சிவ பெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவன் கோவில்களில் இரவு முழுவதும் நடக்கும் சிவ பூஜையில் பங்கேற்க வேண்டும். அன்று நாள் முழுவதும் உணவு உண்ணாமலும், உறங்காமலும் இருக்க வேண்டும். இடைவிடாது சிவ மந்திரங்களை உச்சரித்தபடி சிவ சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். மாலையில் சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.




மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், 2ம் காலத்தில் விஷ்ணுவும், 3ம் காலத்தில் அம்பிகையும், 4ம் காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானை வழிபட்ட காலமாகும். இந்த நான்கு கால பூஜை முடிந்த பிறகு கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு, பட்டினி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு மார்ச் 09ம் தேதி பகல் முழுவதும் தூங்காமல், மாலை வீட்டில் விளக்கேற்றி சிவனை வழிபட்ட பிறகு, இரவு 7 மணிக்கு பிறகே தூங்க செல்ல வேண்டும்.


மூன்றாம் கால பூஜையான இரவு 11.45 முதல் 12.15 வரை நடைபெறும் பூஜையின் போது கண்டிப்பாக கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். அடி முடி காண முடியாத லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சி தந்த காலமாகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்தால், மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபட்ட பலனை பெற்று விடலாம்.


ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஷங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி நடத்தினார். 


நடிகை தமன்னா மனம் உருகி சிவனை வழிப்பட்டார். நடிகர் சந்தானம் மனம் உருகி கண்ணீர் விட்டு வேண்டிகொண்டார். தமன்னா மற்றும் சந்தானம் கலந்து கொண்டு சிவபெருமானை உருகி வேண்டிய வீடியோக்கள் தற்பொழுது இணைய பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்