பன் பட்டர் ஜாம் படம் மூலம்.. ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.. பிக் பாஸ் புகழ் ராஜு!

Jul 02, 2024,12:20 PM IST

சென்னை:   விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு புகழ்பெற்ற ராஜு பன் பட்டர் ஜாம் மூலம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.


பிக் பாஸ் புகழ் ராஜு விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதன் பின்னர் நட்புனா என்னானு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், உள்ளிட்ட படங்களில் குணசேத்திர வேடங்களிலும் நடித்து வந்தார். ‌இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜூ. இதன் மூலம் பலதரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமாக அறியப்பட்டார்.




இப்படியாக தனது கேரியரில் படிப்படியாக முன்னேறி வெற்றி முகத்தை கண்ட ராஜு ஒரு கட்டத்தில் விஜய் ஸ்டார்ஸ் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராகவும் விளங்கினார். சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து அவ்வப்போது வெள்ளித்திரைகளிலும் சிறு சிறு ரோல்களிலும் நடித்து, பின்னர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ராஜு தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.


இவர் ஹூரோவாக அறிமுகமாகும் படத்திற்கு பன் பட்டர் ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில்  சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் பன் பட்டர் ஜாம் படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜீரோ படத்திற்கு வசனம் எழுதியவர். அதேபோல் பாரம் படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் வசனம் எழுதியதற்கு தேசிய விருதும் பெற்றவர். காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக தோன்றியவர். தற்போது ராஜு நடிக்கும் பன் பட்டர் ஜாம் படத்தையும் இயக்குகிறார்.இது இவருக்கு இரண்டாவது படம்.




இதில் ஆதித்யா, பிரசாத், பவ்யா தாரிக்கா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது உள்ள காலகட்டத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கும் இன்றைய இளைஞர்களை பற்றிய கதையாகும். ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அந்தக் கணத்தை சந்தோஷமாக வாழ பழகினால் வாழ்க்கையில் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவான கருத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்ப ததும்ப உருவாக்கப்பட்டுள்ளதாம்.


இந்த நிலையில் இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் வரும் ஜூலை எட்டாம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்