நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட ராகவா லாரன்ஸ்!

Apr 13, 2024,12:59 PM IST

சென்னை: நடிகர் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று சாமி கும்பிட்டார்.


நடிகர் விஜய் தனது தாயாரின் விருப்பத்திற்காக அவர் விரும்பிய படி சாய்பாபாவிற்கு ஒரு கோவிலை கட்டியுள்ளார். சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் குறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இந்த கோவில் கட்டப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் அதற்கு முன்பு வரை வெளியாகவில்லை. எனவே திடீரென இந்த கோவில் குறித்த செய்திகள் வெளியானதால் ரசிகர்களும் கூட ஆச்சரியமே அடைந்தனர்.




இந்த கோவில் குறித்து விஜயின் தாயாரம் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் கூறுகையில், எனக்கு சாய்பாபாவிற்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.  எனது மகனிடம் சொல்லி இருந்தேன். அவர் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த சாய்பாபா கோவில் பிரபலம் அடைய ஆரம்பித்துள்ளது.


நடிகரும், விஜயின் நண்பர்களில் ஒருவருமான ராகவாலாரன்ஸ் இந்த கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அங்கு ஷோபா சந்திரசேகர் ராகவா லாரன்சை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் சென்ற ராகவா லாரன்ஸ் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில் எனது நண்பன் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு இன்று சென்றேன். என்னுடன் ஷோபா அம்மாவும் வந்திருந்தார்.


நான் ராகவேந்திரா சுவாமி கோவில் கட்டிய போது அவர் எனக்காக அந்த கோவிலுக்கு வந்து பாடி மகிழ்வித்தார். எங்களை வந்து ஆசீர்வதித்தார். இப்போது அவர் கட்டியுள்ள அந்த கோவிலுக்கு நான் அவருடன் சென்றுள்ளேன். என்னுடைய நண்பன் விஜய்க்கு எனது இதயம் மறந்து இதயபூர்வமான நன்றிகளும். 




இந்த கோவிலுக்கு வந்த போது எனக்கு மனம் நிறைந்த காணப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தவறாமல் இந்த கோவிலுக்கு வந்து சாய்பாபாவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்