தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் பிரசாந்த் நிவாரண பொருட்களை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழையில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6000மும், மற்றவர்களுக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமீபத்தில்தான் நடிகர் விஜய் தூத்துகுடி, நெல்லை மக்களுக்கு நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை நேரில் வந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரஷாந்த்தும் நேரில் வந்து உதவிகளை வழங்கி மக்களை மகிழ்வித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}