Trisha controversy: "வில்லாதி வில்லன்" மன்சூர் அலிகான்.. முன் ஜாமீன்.. கேட்டு மனு தாக்கல்!

Nov 23, 2023,10:46 AM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் திரிஷாவை  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் பல்வேறு தரப்பினரும் நடிகை திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கண்டனம்  தெரிவித்து வந்தனர். திரிஷதான் முதலில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்தே மற்றவர்கள் இதுகுறித்து விமர்சிக்க ஆரம்பித்தனர்.

நடிகர் சங்கமும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆவேசத்துடன் பேசிய மன்சூர் அலிகான், நான் எந்த  தவறும் செய்யவில்லை. நான் யாரிடமும் மன்னிப்பும் கேட்க முடியாது என்று சவால் விடும்படி மன்சூர் அலிகான்  தெரிவித்திருந்தார்.



இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்களின் உணர்வுக்கு குந்தகம் ஏற்படுத்துதல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில்  ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணி அளவில் மன்சூர் அலிகான் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதனால் அவர் இன்று விசாரணைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது முன்ஜாமின் கோரி கோர்ட்டுக்குப் போய் விட்டார் மன்சூர் அலி கான். சென்னை முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு செய்துள்ளார்.  விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்