நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு சென்ற 10 வயது சிறுவன், நாகை அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளார். அந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கட்டு விரியன் பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இந்த பாம்பு கடித்தவர்களின் தசை பகுதிகள் செயலற்றதாக்கி விடும் தன்மை கொண்டதாகும். இந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்தால் கிட்டதட்ட 1 மணி நேரத்தில் இறந்து விடுவார்களாம். மூச்சு மண்டலம் செயலிப்பதாலேயே பொதுவாக உயிர் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்த 10 வயது சிறுவன் தற்பொழுது முழு உடல் நலத்துடன் மீண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.
நாகை மாவட்டம் மூகனூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 10 வயது மகன் திவாகர். மே 18ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவனின் கையில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு கடித்தது. இதில் சிறுவனின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்தன. சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை நாகையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவ குழுவினர் தீவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பூரண உடல் நலம் பெற்று சிறுவன் திவாகர் நேற்று வீடு திரும்பினார். அவனது பெற்றோர்கள் மருத்துவர்களுக்கு மனம் உறுகி நன்றி தெரிவித்தனர். கட்டு விரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு போய் தற்போது நல்ல நிலையில் உள்ள சிறுவனைப்பார்த்து மாரியப்பன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வியந்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}