அடுத்தடுத்து அதிரடி.. தொடர்ந்து 2வது சதம்...தெறிக்க விட்ட விராத் கோலி!

May 22, 2023,10:25 AM IST

பெங்களூரு : ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து தனது 2வது சதத்தை பதிவு செய்துள்ளார் விராத் கோலி. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோலி 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி, பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகவே துவங்கியது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. 



இதில் 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார் விராத் கோலி. இதில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் அடிக்கும் ஏழாவது சதம் இதுவாகும். சமீபத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 6வது சதத்தை அடித்து கிரிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த விராத் கோலி, தற்போது கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர், ஷிகர் தவானை தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளார் விராத் கோலி. ஐபிஎல் 2023 தொடரில் மட்டும் விராத் கோலி 630 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் விராத் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் 2016 ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் 973 ரன்கள் எடுத்து விராத் கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்