லாஸ் ஏஞ்சலெஸ்: 1984ம் ஆண்டு சென்னையில் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது சகோதரி குடும்பத்தை மொத்தமாக தீர்த்துக் கட்டிய சம்பவம் போல அமெரிக்காவில் ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அப்போது தனது சகோதரி, அவரது கணவர், குழந்தைகள் உள்பட மொத்த குடும்பத்தினர் 9 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார். அப்போது இந்த வழக்கு தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஆனால் இங்கு சகோதரிக்குப் பதில், மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார் இந்த அமெரிக்கர்.
எனோச் நகரில் உள்ள உடா குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவி உள்பட வீட்டில் இருந்த 7 பேரை சுட்டுக் கொன்றார். இதில் 5 குழந்தைகள் அடக்கம். கடைசியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
இறந்த 5 குழந்தைகளில் ஒன்றுக்கு 4 வயதுதான் ஆகிறது என்பது பரிதாபமானது. கொலை செய்து தற்கொலையும் செய்து கொண்ட நபரின் பெயர் மிக்கேல் ஹைட் என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் - மிக்கேலின் மனைவி, மாமியார், மிக்கேலின் 5 குழந்தைகள் (3 பெண்கள், 2 பையன்கள், 4 முதல் 17 வயது வரையிலானவர்கள்)
Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்
தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு
ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!
தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!
சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?
பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!
தீபாவளியை முன்னிட்டு திடீர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி!
சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து
சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!
{{comments.comment}}