கேரளாவில் வேகமாக பரவும் டைப் 2 டெங்கு... 4 நாட்களில் 309 பேர் பாதிப்பு; 5 பேர் பலி

Jul 06, 2023,12:32 PM IST
திருவனந்தபுரம் : கேரளாவில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் 300 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதமும் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இடையில் சொதப்பிய பருவ மழை கடந்த 3 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பெரு மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் தற்போது அங்கு டெங்கு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில,  
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, இதுவரை டெங்குவால் 3409 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை  10,038 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. டெங்கு தவிர மழை தொடர்பான எலி காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பல மாவட்டங்களில் பரவி வருகிறது.

கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட 138 இடங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக சமீபத்தில் கண்டறியப்பட்டன. தற்போது கேரளாவில் அதிகம் பரவி வருவது டைப் 2 டெங்கு காய்ச்சல் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்