கேரளாவில் வேகமாக பரவும் டைப் 2 டெங்கு... 4 நாட்களில் 309 பேர் பாதிப்பு; 5 பேர் பலி

Jul 06, 2023,12:32 PM IST
திருவனந்தபுரம் : கேரளாவில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் 300 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதமும் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இடையில் சொதப்பிய பருவ மழை கடந்த 3 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பெரு மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் தற்போது அங்கு டெங்கு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில,  
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, இதுவரை டெங்குவால் 3409 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை  10,038 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. டெங்கு தவிர மழை தொடர்பான எலி காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பல மாவட்டங்களில் பரவி வருகிறது.

கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட 138 இடங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக சமீபத்தில் கண்டறியப்பட்டன. தற்போது கேரளாவில் அதிகம் பரவி வருவது டைப் 2 டெங்கு காய்ச்சல் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்