ஏப்பா தம்பி.. அந்த ஃபேனை 15ல வய்யி.. நைட்டெல்லாம் தூங்க முடியலை..!

Jun 16, 2023,10:07 AM IST
சென்னை: சென்னையிலும் அக்கம் பக்கத்து மாவட்டங்களிலும் வெயில் மீண்டும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. இரவில் புழுக்கம் அதிகரித்திருப்பதால் மக்களால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை  நிலவுகிறது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது. தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தொடங்கி விட்டது. அரபிக் கடலில் இந்த சீசனில் முதல் புயல் உருவாகி, மெகா புயலாக மாறி அது கரையையும் கடந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் வெயில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.



பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் இரவில் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஏசி இல்லாமல் தூங்கவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதை விட மோசம், பேனை போடக் கூட முடியவில்லை. போட்டால் அனல் காற்றுதான் வருகிறது. நிம்மதியாக தூங்க முடியாமல் வியர்வைக் குளியலில் மக்கள் அவஸ்தைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் 41 முதல் 42 டிகிரி வரை உயரக் கூடும்.  குறிப்பாக 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் போகாமல் இருப்பது மிகவும் நல்லது. தேவைப்பட்டால் மட்டும் போங்க.

இன்னும் 2 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் நிறைய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஸோ, எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு 2 நாட்களை ஓட்டி விட்டால் பிறகு மழை வந்து நம்மை நனைத்து கொஞ்சம் அனலைக் குறைக்கும்.. பார்க்கலாம்.

ஏப்பா தம்பி.. அந்த ஃபேனை 15ல வய்யி!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்