பரவும் கொரோனா.. தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்!

Mar 31, 2023,03:50 PM IST
சென்னை : ஏப்ரல் 01 ம் தேதியான இன்று முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது.  இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னேச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இதில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. 



இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் துவக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.




சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்