சென்னை : தமிழகத்தில் ஒமிக்ரான் XBB, BA2 வகை வைரஸ் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா, வைரஸ் காய்ச்சல் ஆகியன அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியானது. சளி, காய்ச்சல், தொண்டையில் தொற்று ஆகியவற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் சிலர் இது வழக்கமாக சீசனில் பரவும் காய்ச்சல் தான் என கூறி வந்தனர். ஆனால் தீவிர வைரஸ் ஒன்று பரவுவதை பில் கேட்ஸ் உள்ளிட்ட பலரும் உறுதியாக கூறி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது தொடர்பாக, தமிழக அரசு எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை, முன்னேச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் XBB, BA2 வகை வைரஸ் பரவி. ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர் மறுத்து விட்டார்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}