சென்னை : தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவில் திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவதும் ஆடல் பாடல் நிகழ்ச்சி மற்றும் குறவன் - குறத்தி ஆட்டம் தான். கோவில் திருவிழாவின் பொது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்களோ இல்லையோ ஆடல் பாடல் நிகழ்ச்சி மற்றும் குறவன் - குறத்தி நிகழ்ச்சியை பார்க்க ஒரு தனி கூட்டமே எதிரிப்பார்த்து காத்திருக்கும்.
இவ்வாறு சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த இரு நிகழ்ச்சிகள் நடனம் என கூறிக்கொண்டு ஆபாசமாக இருப்பது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டு பல கோவில்களில் தடை விதிக்கப்பட்டன.
ஆடல் பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து குறவன் - குறத்தி ஆட்டமும் ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடனம் என கூறிக்கொண்டு கோவில் திருவிழாக்களில் ஆபாசமாக நடனம் ஆடுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிட்டிடப்பட்டது. கோவில் திருவிழாக்களில் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு அனுமதி பெற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}