தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் "சைக்கிளில்" ஏறி.. பயணம் செய்ய பாஜக முடிவு!

Jun 04, 2023,02:27 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களிலும் பாஜக தனித்தே போட்டியிட்டு வருகிறது. ஆந்திராவில்  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என இரு பெரும் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் இரண்டுமே பாஜகவுடன் தொடர்பில்தான் உள்ளன. ஆனாலும் தனித்தே கடந்த 2019 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டன.

அத்தேர்தலில் தெலுங்கு தேசமும், பாஜகவும் தோல்வியைத் தழுவின. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கைப்பற்றினார். எதிரும்புதிருமாக போட்டியிட்டாலும் கூட தெலுங்குதேசமும், பாஜகவும் மறைமுகமாக நட்பாகத்தான் உள்ளன.   ஆனால் தெலுங்கு தேசத்தை காலி செய்யும் நோக்கில் படு வேகமாக செயல்பட்டு வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.  அக்கட்சிகளுக்கு இடையிலான மோதல் உச்சத்தை எட்டி வரும் நிலையில் தனது கவனத்தை தெலங்கானா பக்கம் திருப்பியுள்ளது பாஜக.




தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.  டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்துப் பேசியதாக தெரிகிறது.

தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அதன் ஒருங்கிணைப்பாளராகவும் கூட இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு கூட்டணியிலிருந்து விலகியது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததைத் தொடரந்து கூட்டணியை விட்டு விலகியது.


ஆனால் சமீப காலமாக பாஜகவுடன், தெலுங்கு தேசம் இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் மன்கி பாத் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்டிஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியிருந்தது நினைவிருக்கலாம். விரைவில் கூட்டணி தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018ம் ஆண்டு தெலங்கானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களே கிடைத்தன.  ஏஐஎம்எம் கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்தன. தெலுங்கு தேசம் கட்சிக்கு வெறும்  2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே. இப்படிப்பட்ட நிலையில், பாஜகவும், தெலுங்கு தேசமும் இணைந்து என்ன செய்யப் போகின்றன என்று தெரியவில்லை.  தெலங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்