இனி ஒர்க் ஃபிரம் ஹோம் கிடையாது.. "அச்சச்சோ".. பெண் ஊழியர்களை இழக்கும் டிசிஎஸ்!

Jun 14, 2023,10:12 AM IST

மும்பை : இனி ஒர்க் ஃபிரம் ஹோம் முறை கிடையாது என இந்தியாவில் மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அறிவித்துள்ளது. இதனால் பல பெண் ஊழியர்கள் இழக்கும் சூழலில் அந்நிறுவனம் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகும் டிசிஎஸ்.,ல் வேலை செய்யும் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தனர். இதனால் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளி்ல் இருந்தும் கூட பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது கொரோனா காலத்தில் வீ்டடில் இருந்து பணி செய்த ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வைக்க டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.



ஆனால் இதற்கு பெண் ஊழியர்கள் பலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இனி யாருக்கும் ஒர்க் ஃபிரம் ஹோம் முறை கிடையாது என டிசிஎஸ் கண்டிப்பாக சொல்லி உள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் பலர் தங்களின் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆண் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவது போல் பெண் பணியாளர்களையும் அலுவலகத்திற்கு வரவழைத்து, இதனால் பாலின பாகுபாடு ஏற்படுவதை தவிக்க நினைத்து டிசிஎஸ் எடுத்த முடிவு தற்போது அதற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. 

ஒர்க் ஃபிரம் ஹோம் முறை டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சமீப ஆண்டுகளாக பெரிதும் கைகொடுத்தது. திறமையான பணியாளர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் வீடு -அலுவலகம் என்ற டென்சன் இல்லாமல் பணியாற்றி வந்தனர். தற்போது இவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

உலக வங்கி அளித்துள்ள புள்ளி விபரத்தின் படி சீனாவில் உள்ள 61 சதவீதம் பெண் ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள். இது பொருளாதா வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறி இருந்தது. டிசிஎஸ் நிறுவனத்தில் 36 சதவீதம் பேர் பெண் ஊழியர்கள் தான்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்