டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. 60 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரே நாளில், டெல்லியிலும், மும்பையிலும் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தென் மேற்குப் பருவ மழை ஒவ்வொரு பகுதியாக பெய்ய ஆரம்பித்துள்ளது. கேரளாவில் ஆரம்பித்த பருவ மழை தற்போது டெல்லியிலும், மும்பையிலும் தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நாளில் மழை தொடங்கியதுதான் விசேஷமே.
இதற்கு முன்பு 60 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்படி ஒரே நாளில் இரு நகரங்களிலும் பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்லிக்கு 2 நாட்களுக்கு முன்பே மழை வந்துள்ளது. மும்பையைப் பொறுத்தவரை 2 வாரம் லேட்டாக வந்து சேர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையிலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. மகாராஷ்டிரா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானாவின் சில பகுதிகள், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்முவின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் மேலும் நல்லமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அந்தேரி, மலட், தஹிசார் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்தினகிரி ஆகிய பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. பால்கார், தானே, மும்பை, சிந்துதுர்க் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}