சிவகார்த்திகேயன் மகனா இது.. பார்த்தவுடன் வசீகரிக்கும்.. சூப்பர் க்யூட் போட்டோஸ்!

Jul 12, 2023,04:48 PM IST
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள், மகனுடன் இருக்கும் குடும்பப் படங்களை வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது.



சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தாஸ் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மிகவும் சிம்பிளான மனிதர் சிவகார்த்திகேயன். எந்த பந்தாவும் பண்ணாமல் வலம் வரக் கூடிய வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது குடும்பத்தை பெரிய அளவில் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அவர்களை தர்மசங்கப்படுத்துவதில்லை. அதேசமயம் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அவரது மனைவி வந்து செல்வது வழக்கம்.



சிறப்பு தருணங்களில் தனது குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். பொங்கல், தீபாவளிக்கு போட்டோ எடுத்து வெளியிடுவார். இந்த நிலையில் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் இணைந்து க்யூட்டான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளர் சிவகார்த்திகேயன்.



குகன் பிறந்த நாளையொட்டி எடுக்கப்பட்ட போட்டோஷூட் இது. இதில் குகன் படு ஜாலியாக அப்பா, அம்மாவின் கைகளில் தவழ்கிறார். அதேபோல அக்கா ஆராதனாவுடனும் ஜாலியாக போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார்.  அப்பாவும், பிள்ளைகளும் வெள்ளை நிற டிரஸ்ஸில் இருக்க, அம்மா ஆர்த்தி பிரவுன் கலர் குர்தாவில் காணப்படுகிறார்.




சிவகார்த்திகேயன்  - ஆர்த்திக்கு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு ஆராதனா பிறந்தார். 2021ல் குகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து மகள் ஆராதனா சினிமாவில் பாட்டும் பாடியுள்ளார்.

Images: Sivakarthikeyan Instagram

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்