ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ப்ரொமோஷன் நிறுத்தி வைப்பு

May 13, 2023,09:16 AM IST

டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்து, அவரது எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்த சூரத் மாஜிஸ்திரேட் ஹரிஷ் குஷ்முக்பாய் வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

குஜராத் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட 68 நீதித்துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் குறைவாக மார்க் எடுத்தவர்களுக்கு பதவி உயர்வும், அதிக மார்க் எடுத்தவர்களுக்கு பதவி உயர்வும் மறுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் இருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.



இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குஜராத் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு சட்ட விரோதமானது எனக் கூறி நீதித்துறையை சேர்ந்த 68 பேரின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடந்துள்ளதாக குஜராத் ஐகோர்ட் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

இருந்தாலும் மெரிட் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும் படி சுப்ரீம் கோர்ட்டை, குஜராத் ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

மோடி என்ற பெயரை அவதூறாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்தவர்தான் இந்த சூரத் மாஜிஸ்திரேட் ஹரிஷ் குஷ்முக்பாய் வர்மா. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். இதனால் ராகுல் காந்தியின் எம். பி பதவி பறிபோனது என்பது நினைவிருக்கலாம். இந்த தீர்ப்பின் பரபரப்பு கூட இன்னும் மாறாத நிலையில் இவருக்கு பதவி உயர்வு வந்ததால் சலசலப்பும் சர்ச்சையும் எழுந்தது.

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்