2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மனு...ஜூலை 21 ல் விசாரிக்க ஓகே சொன்ன சுப்ரீம் கோர்ட்

Jul 18, 2023,11:54 AM IST
டில்லி : திருடர்கள் அனைவரும் மோடி என்ற பெயர் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பேசியதை எதிர்த்து பாஜக நிர்வாகி ஒருவர் குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு பதிவு செய்தார். 2019 ம் ஆண்டு போடப்பட்ட இந்த வழக்கில் சமீபத்தில் சூரத் கோர்ட் பரபரப்பு தீர்பு வழங்கியது. 

ராகுல் காந்திக்கு, சூரத் கோர்ட் இரண்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவரின் லோக்சபா எம்பி., பதவி பறிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து சமீபத்தில் ராகுல் காந்தி டில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து விட்டு, தனது தாய் சோனியா காந்தி வசிக்கும் வீட்டில் வசித்து வருகிறார். விரைவில் அங்கிருந்து டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் வசித்த வீட்டிற்கு ராகுல் காந்தி மாற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.



இதற்கிடையில் சூரத் கோர்ட் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க ஏற்றதல்ல என சமீபத்தில் குஜராத் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட இருண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்திர சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராகுல் காந்தியின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், இந்த மனு மீதான விசாரணை ஜூலை 21 ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்