ரூ.2000 நோட்டுக்களை ஈஸியாக மாற்றலாம்.. வதந்திகளை நம்பாதீங்க.. எஸ்பிஐ அறிவிப்பு

May 22, 2023,01:16 PM IST
டெல்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவது தொடர்பாக சோஷியல் மீடியாவில் பரவி வரும் தவறான தகவல்களை பொது மக்கள் யாரும் நம்ம வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி, ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு படிவத்தை பூர்த்தி செய்து, அதோடு ஆதார் போன்ற அடையாள சான்றை அளிக்க வேண்டும் என சோஷியல் மீடியாக்களின் தகவல் பரவியது.



இதனையடுத்து இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த அடையாள சான்றும் அளிக்க வேண்டியது கிடையாது. ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கும், டெபாசிட் செய்வதற்கும் எந்த அளவு கட்டுப்பாடும் கிடையாது. 

ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வரிசையில் நின்று மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை வரிசையில் நின்று ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றி விட்டு, மீண்டும் அதே வரிசையில் நின்று ரூ.20,000 வரையிலான நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாளில் இத்தனை முறை தான் வர வேண்டும், இவ்வளவு தொகை தான் மாற்ற முடியும் என்ற அளவு கிடையாது என எஸ்பிஐ வங்கி பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமல்ல, வாடிக்கையாளர் அல்லாதவர்களும் எந்த வங்கி கிளைக்கு வேண்டுமானாலும் சென்று  ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றுக் கொள்வதற்கு தனியாக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்