உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற ஐநாவில் தீர்மானம்.. இந்தியா நடுநிலை!

Feb 24, 2023,01:02 PM IST
ஜெனிவா : உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறக் கோரி ஐநா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை கணிக்க முடியாமல் உலக நாடுகள் குழம்பி உள்ளன.

2014 ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் அவ்வப் போது உக்ரைன் பகுதியில் தாக்குதல்களை நடத்தி வந்தது. 2022 ம் ஆண்டு முதல் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை இனியும் தொடர வேண்டாம் என்பதால் போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா பொதுசபை மற்றும் உலக நாடுகள் பலவும் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.




சமீபத்தில் அமெரிக்கா உடனான அணுஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா வெளியேறியது. அப்போது உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாமிர் புடின், உக்ரைன் உடனான போரை ஒரு போதும் நிறுத்த போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக இதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐநா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் ரஷ்யா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 7 நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. அதே சமயம் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அதிகப்படியான நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததால், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்