இந்த வருடத்தின் "சிறந்த கவர்னர்" சக்திகாந்த தாஸ்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Mar 17, 2023,12:19 PM IST
டெல்லி: மத்திய வங்கிகள் விருது 2023ல் முக்கிய அம்சமாக, இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் விருது, ரிசர்வ்  வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

இது நாட்டுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதன்கிழமை விருது அறிவிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காலம், உக்ரைன் போர் என பொருளாதார சூழலுக்கு எதிரான கடும் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தி, சீராக வழிநடத்தியமைக்காக சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.




ரிசர்வ் வங்கி ஆளுநராக 2வது முறை பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார்  சக்திகாந்த தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவின் பிடியில் நாடு சிக்கியிருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். 

சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து டிவீட் போட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது பெருமைமிகு தருணம். சக்திகாந்த தாஸுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்