மணிப்பூரில் ராகுல் காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

Jun 29, 2023,04:37 PM IST
இம்பால் : மணிப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் காரை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். 

மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை மணிப்பூர் புறப்பட்டுச் சென்றார். மணிப்பூரின் சுரசாந்பூர் செல்வதற்காக ராகுல் திட்டமிட்டிருந்தார்.



ஆனால் சுரசாந்பூருக்க செல்லும் வழியில், பிஷ்னுபூர் செக் போஸ்ட் அருகிலேயே ராகுலின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது பற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ராகுலை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் எங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் எதற்காக எங்களை தடுத்தார்கள் என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.



வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கும், இம்பால் மற்றும் சுரசந்பூர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க ராகுல் திட்டமிட்டிருந்தார். அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்